பாகிஸ்தானில் பாரிய நிலநடுக்கம்

பாகிஸ்தானில் இன்று (07) அதிகாலை பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த நிலநடுக்கத்தினால் 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், 200க்கும் அதிகமானோர் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் அவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir