உக்ரைனுக்கு 398 மில்லியன் டொலர் கடனுதவி

ரஷ்யா தாக்குதலால் தற்போது உக்ரைன் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு நாடுகள் உக்ரைனுக்கு உதவி வருகின்றனர். ரஷ்ய ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு கனடா 398 மில்லியன் டொலர் கடனுதவி வழங்கவுள்ளது.

உக்ரைனின் நிதி அமைச்சர் செர்ஜி மார்ச்சென்கோ கனடா அரசாங்கத்துடன் 10 வருட கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

உக்ரைனில் நலன் சார்ந்த விஷயங்களுக்கு கனடா அரசாங்கம் கடன்களை வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: kalaikkathir