சைவ அமைப்புகள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பில் நாளை கலந்தாய்வு!

வடக்கு கிழக்கிலுள்ள சைவ சமயம் சார்ந்த அமைப்புகள், கோவில் தர்மகர்த்தா சபையினர், ஆதீன கர்த்தாக்கள், கோவில் நிர்வாகத்தைச் சேர்ந்தவர்களுக்கான அவசர கலந்துரையாடல் வெள்ளிக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு நல்லை ஆதீனத்தில் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்துக்கு மேற்குறிப்பிட்ட அமைப்புக்களைச் சார்ந்த மூன்று பிரதிநிதிகளை தவறாது சமுகமளிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

தற்போது வடக்கு, கிழக்குப் பகுதிகளில் சைவக்கோவில்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள்
மற்றும் சைவ மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்து முக்கிய
தீர்மானங்களை எடுக்கவேண்டியுள்ளதால், மேற்குறிப்பிட்ட அமைப்புக்களைச் சார்ந்தவர்களை
தவறாது சமுகமளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: digital