இராணுவத்தினருக்கிடையேயான வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள சூடானில் வசித்து வந்த இலங்கையர்களில் 13 பேர் அடங்கிய குழு வெற்றிகரமாகச் சூடானிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
சூடானில் 41 இலங்கையர்கள் வசித்து வந்த நிலையில் 13 பேர் சவூதி அரேபியாவில் உள்ள ஜெத்தா துணைத் தூதரகத்துக்கு பாதுகாப்பாக அழைத்துவரப்பட்டனர்.
மேலும், சூடானில் வன்முறைக்கு மத்தியில் சிக்கிய இலங்கையர்கள், இந்தியா அல்லது சவூதி அரேபியாவின் உதவியுடன் பாதுகாப்பாக வெளியேற்றப்படுவார்கள் எனவும் அமைச்சர் சப்ரி தெரிவித்திருந்தார்.
T01