வவுனியா பூவரசங்குளத்தில் 6 வயதுச் சிறுமி வன்புணர்வு; இளைஞன் கைது!

வவுனியாவில் 6 வயதுச் சிறுமியை வன்புணர்வு செய்த குற்றச்சாட்டின் பேரில் ஓர் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பூவரசங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வன்புணர்வுக்கு ஆளான சிறுமி வவுனியா, பூவரசன்குளம் பகுதியில் அமைந்துள்ள முச்சக்கர வண்டிச் சாரதி ஒருவரின் வீட்டில் வாடகைக்குத் தங்கி இருந்துள்ளார். குறித்த சிறுமிக்குத் தந்தை இல்லாத நிலையில், குடும்ப வறுமை காரணமாகத் தாயார் வெளிநாட்டில் பணிப்பெண்ணாகப் பணிபுரிந்து வருகின்றார்.

குறித்த சிறுமிக்குக் காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் பூவரசங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில், சிறுமியின் அந்தரங்க உறுப்பில் இரத்தப்போக்கை அவதானித்த வைத்தியர்கள் பூவரசங்குளம் பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்ததையடுத்து, விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பில் சிறுமி தங்கியிருந்த வீட்டில் வசித்த இளைஞரைக் கைதுசெய்துள்ளனர்.

விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் குறித்த இளைஞனை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

T01

 

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply