தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் மேதின நிகழ்வு

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் சர்வதேச உழைப்பாளர் தின நிகழ்வுகள் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இடம்பெற்றன.


தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் நா.பார்த்திபன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அரசறிவியல் துறைத் தலைவர் கே.ரி.கணேசலிங்கம், தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன், அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.

அந்த நிகழ்வில் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் உறுப்பினர்கள் ஆர்வலர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

You May Also Like

About the Author: digital

Leave a Reply