மலேசிய கடற்பகுதியில் கப்பல் விபத்து; 3 பணியாளர்களைக் காணவில்லை!

தெற்கு மலேசியக் கடற்பகுதியில் எண்ணெய்க் கப்பல் ஒன்று தீடிரெனத் தீப்பற்றியுள்ளது. இதன்போது, கப்பலில் பயணித்த பணியாளர்கள் மூவரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று திங்கட்கிழமை மாலை எம்.டி.பாப்லோ என்ற எண்ணெய்க் கப்பல் 28 பணியாட்களுடன் சீனாவில் இருந்து சிங்கப்பூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. குறித்த கப்பலானது, மலேசியாவின் தன்ஜூங் செடிலி (Tanjung Sedili) கடற்பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, தீடிரெனத் தீப்பற்றியது. இதனையடுத்து, மலேசியக் கடலோரக் காவல்படையினர், 25 பணியாளர்களை மீட்டதோடு, காணாமல் போன மூவரைத் தேடும் பணிகள் தொடர்கிறது.

தீ விபத்து குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

T01

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply