நாட்டில் பெய்துவரும் கனமழை காரணமாக மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

இன்று நாட்டின் பல்வேறு பாகங்களிலும் கனமழை பெய்துவருவதன் காரணமாக பதுளை, மாத்தறை மற்றும் கேகாலை மாவட்டங்களின் பல பிரதேசங்களுக்குத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மண்சரிவு அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது.

அதன்படி, பதுளை மாவட்டத்தின் ஹல்துமுல்ல மற்றும் பசறைப் பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட பிரதேசங்களுக்கும், மாத்தறை மாவட்டத்தின் கொட்டபொல மற்றும் பஸ்கொட பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட பிரதேசங்களுக்கும், கேகாலை மாவட்டத்தின் கேகாலைப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களுக்கும் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசங்களில், கடந்த 24 மணித்தியாலங்களில் 75 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதால், மண்சரிவு மற்றும் பாறைச் சரிவு போன்ற அபாயங்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு மேற்குறிப்பிட்ட பிரதேசத்தில் வாழும் மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

T01

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply