சூடானில் மோதலுக்கு மத்தியில் ஏழு நாள் போர் நிறுத்தம்!

சூடானில் அதிகார மோதலில் ஈடுபட்டிருக்கும் இரணுவக் குழுக்களிடையே ஏழு நாள் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சூடானில் இராணுவத்தினருக்கும் துணை இரணுவத்தினருக்கும் இடையே தொடர்ந்து வரும் மோதல் காரணமாக இதுவரையில் 500 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் தென்சூடானின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையின் பிரகாரம், இருதரப்புகளிலுமிருந்து சமாதானப் பேச்சுவார்த்தைக்காகப் பிரதிநிதிகளை அனுப்பிவைக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், மோதலின் காரணமாக இதுவரையில் ஏறக்குறைய 73,000 பேர் சூடானை விட்டு வெளியேறியுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

T01

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply