வெசாக் பண்டிகையை முன்னிட்டு சிறைக் கைதிகளைப் பார்ப்பதற்கு விசேட வாய்ப்பு

வெசாக் தினத்தை முன்னிட்டு, சிறைச்சாலையில் உள்ள கைதிகளை அவர்களது உறவினர்கள் சந்திப்பதற்கு இரண்டு நாட்கள் வாய்ப்பு வழங்குவதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக சிறைச்சாலைகளின் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

குறித்த வாய்ப்பானது வெசாக் பண்டிகையான நாளையும் (5) நாளை மறுதினமும் (6) வழங்கப்படும் என சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

அதன்படி, உறவினர்கள் கொண்டு வரும் உணவு மற்றும் இனிப்புகளைச் சிறைக் கைதிகளுக்கு வழங்க முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சிறைக் கைதிகளைப் பார்வையிட வரும் பார்வையாளர்கள் சிறைச்சாலை விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளையும், முறையான சுகாதார மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளையும் பின்பற்றி கைதிகளைச் சந்திக்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

நாட்டிலுள்ள அனைத்துச் சிறைச்சாலைகளுக்கும் மேற்குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

T01

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply