பதில் பாதுகாப்பு அமைச்சராக பிரேமித பண்டார நியமனம்!

இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளிநாடு சென்றிருப்பதனால் பதில் பாதுகாப்பு அமைச்சராக பிரேமித பண்டார நியமிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேவேளை ஐக்கிய இராச்சியத்திற்கான பயணத்தை முடித்துக்கொண்டு ஜனாதிபதி இலங்கை திரும்பும் வரைக்கும் நிதி அமைச்சரின் கடமைகளை நிறைவேற்றுவதற்காக பதில் நிதி அமைச்சராக ஷெஹான் சேமசிங்கவும் இன்று காலை சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

T02

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply