12 லட்சம் பெறுமதியான போலி நாணயத்தாள்களுடன் யாழில் இருவர் கைது!

12 லட்சம் பெறுமதியான போலி நாணயத்தாள்களுடன் இருவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி போலி நாணயத்தாள்களுடன் இருவர் பயணிப்பது தொடர்பாக இராணுவத்தினருக்குக் கிடைத்த தகவலிற்கு அமைய, ஆனையிறவுப் பகுதியில் மறித்து சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது அவர்களிடமிருந்து  5000 ரூபா, 500 ரூபா போலி நாணயத்தாள்கள் பல கைப்பற்றப்பட்டன.

சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் பல்கலைக்கழக மாணவன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கில்  ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

குற்றத்தடுப்பு பிரிவிடம் அவர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பளை பொலிசார் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

About the Author: digital

Leave a Reply