வெசாக் தினத்தை முன்னிட்டுச் சிறைக் கைதிகளுக்கு விசேட அரச பொது மன்னிப்பு

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டுச் சிறைக் கைதிகளுக்கு விசேட அரச மன்னிப்பு வழங்குவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாகச் சிறைச்சாலைகளின் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் 34 ஆவது சரத்தின் பிரகாரம், ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில், சிறைக் கைதிகளுக்கு விசேட அரச மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் விசேட பொது மன்னிப்பின் கீழ் நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளில் இருந்தும் 982 ஆண் கைதிகளும் 6 பெண் கைதிகளும் இன்று விடுதலை செய்யப்படவுள்ளனர்.

கைதிகளுக்கான இந்தப் பொதுமன்னிப்பானது, நிபந்தனைகளின் அடிப்படையில் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

T01

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply