அரச, தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பாரிய விபத்து – 23 பேர் மருத்துவமனையில்!!

அரச, தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி நடந்த பாரிய விபத்தில், 23 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம், கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கஜுகம பகுதியில் இன்று காலை 7.30 அளவில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் பேருந்து ஒன்றும் இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நடந்துள்ளது.

விபத்தில் காயமடைந்த பேருந்தின் சாரதிகள் உள்ளிட்ட 23 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

T03

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply