மத்திய வங்கித் திருத்தச் சட்டமூலத்தை ஒத்திவைக்க ஜனாதிபதி இணக்கம்: சஜித் பிரேமதாஸ

மத்திய வங்கித் திருத்தச் சட்டமூலத்தைப் பிற்போடுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இன்று காலை ஜனாதிபதியைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டபோது, அதற்கு ஜனாதிபதி சம்மதித்ததாக எதிர்க்கட்சித் தலைவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

மசோதாவை ஒத்திவைத்து, அதன் மீது விரிவான விவாதத்திற்கு அனுமதிக்குமாறு தான் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்ததாக சஜித் கூறினார்.

இதனையடுத்து, மத்திய வங்கியின் திருத்தச் சட்டமூலத்தைப் பிற்போடுவது தொடர்பில் இன்றைய வர்த்தகக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்திருந்தார்.

T01

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply