கண்டியில் பாடசாலைக் கட்டிடத்திலிருந்து குதித்த 15 வயது மாணவி படுகாயம்!

கண்டியில் உள்ள பெண்கள் கல்லூரி ஒன்றில் கல்வி கற்கும் 15 வயது மாணவி ஒருவர் பாடசாலையின் கட்டிடத்தின் முதல் மாடியில் இருந்து குதித்துப் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமி நேற்றுக் காலை 11.30 மணியளவில் பாடசாலை வளாகத்திற்குள் அமைந்துள்ள கட்டிடத்தின் முதல் மாடியில் இருந்து குதித்துள்ளார்.

காயமடைந்த மாணவி சிகிச்சைக்காகக் கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த மாணவி கட்டுகஸ்தோட்டை, களுகமுவ வத்த பிரதேசத்தில் வசிப்பவர் எனத் தெரியவந்துள்ளது.

குறித்த மாணவி ஞாபக மறதி நோயினால் பாதிக்கப்பட்டவரெனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கட்டுகஸ்தோட்டைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

T02

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply