குருநாகல் வைத்தியசாலை வைத்தியர்கள் அடையாள வேலை நிறுத்தம்

குருநாகல் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்களுக்குக் கடந்த மே 08 ஆம் திகதி, இனம் தெரியாத நபர் ஒருவரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவத்தையடுத்து, இன்று வைத்தியர்கள் தமது கடமைகளில் இருந்து விலகி ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் முறைப்பாடு அளித்தபோதும், குறித்த நபரைக் கைது செய்யாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று கடமையில் இருந்து விலகி, வைத்தியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், வேலை நிறுத்தத்தால் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பணிகள் பாதிக்கப்படவில்லை எனவும், வைத்தியர்களின் இந்த நடவடிக்கையால் ஏராளமான நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த அடையாள வேலை நிறுத்தம் நாளை காலை 8 மணி வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

T01

 

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply