அநுராதபுரத்தில் மீட்கப்பட்ட வவுனியா பாடசாலை மாணவர்கள்!

வவுனியா செட்டிக்குளம் மாங்குளம் பகுதியில், விடுதி ஒன்றில் தங்கிக் கல்வி கற்று வந்த மன்னார் முத்தரிப்புத்துறைக் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் காணாமல்போன நிலையில் புதன்கிழமை அநுராதபுரத்தில் மீட்கப்பட்டுள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை தமது துவிச்சக்கரவண்டியை எடுத்துக்கொண்டு வண்டிக்கு டயர் வேண்டுவதற்காகச் சென்றவர்கள் நீண்ட நேரமாகியும் விடுதிக்குத் திரும்பவில்லை.

அதன் பிறகு இரவு எட்டு மணியளவில் குறித்த விடுதியின் காப்பாளர் காணாமல் போன மாணவர்களின் பெற்றோருடன் தொடர்புகொண்டு விசாரித்துள்ளார்.

காணாமல் போன மாணவர்கள் தொடர்பாக விடுதிப் பங்குத் தந்தையர்களால் மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதுடன், சமூக வலைத்தளங்களிலும் இவ்விரு மாணவர்களினது புகைப்படங்களும் பகிரப்பட்டன.

இதனையடுத்து இரண்டு நாட்களின் பின்னர் புதன்கிழமை இவ்விரு பாடசாலை மாணவர்களும் அநுராதபுரம் பகுதியில் மீட்கப்பட்டுள்ளனர்.

எனினும் இவர்களை யாரேனும் கடத்திச்சென்றார்களா? அல்லது அவர்களாகவே சென்றனரா? என்பது குறித்துப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

T02

 

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply