சவூதி அரேபியத் தூதுவருக்கும் எம்.எஸ் தௌபீக்கிக்கும் இடையே சந்திப்பு நேற்று இடம்பெற்றது!

திருகோணமலைப் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக்கிக்கும் இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர் காலித் ஹமௌட் நஸீர் அல்டசான் அல்கதானிக்கும் இடையிலான சந்திப்பொன்று சவூதி அரேபியத் தூதரகத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது.

இச்சந்திப்பின்போது, சவூதி அரேபியாவிற்கும், இலங்கைக்குமான நீண்டகால உறவு தொடர்பில் தௌபீக் நினைவுபடுத்தியதுடன், கடந்த காலங்களில் இலங்கை மக்களுக்கு உதவியதற்காகத் தனது நன்றிகளையும் தெரிவித்தார்.

மேலும், திருகோணமலை மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும், அவர்களின் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு, மீன்பிடி, மற்றும் விவசாயம் என்பன தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

குறித்த மக்களுக்கு நியாயமான தீர்வுகளைப் பெற்றுக் தருவதற்கு முயற்சிப்பதாகவும். அவர்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் உரியவர்களின் கவனத்திற்கு கொண்டு வருவதாகவும்  சவூதி அரேபியத் தூதுவர் இதன்போது தெரிவித்திருந்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply