குருநாகல் வைத்தியசாலை வைத்தியர்களைத் தாக்கிய சந்தேகநபர் கைது!

குருநாகல் வைத்தியசாலையில் வைத்தியர்கள் இருவரைத் தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர், நேற்றுப்  பிற்பகல் தம்புள்ளைப் பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டதோடு, அவர் பயணித்த காரையும் குருநாகல் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேக நபர், மாத்தளைப் பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய நபர் எனவும், இன்று அவர், குருநாகல் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 8 ஆம் திகதி குருநாகல் வைத்தியசாலை வைத்தியர்கள் இருவரைத் தாக்கியமை தொடர்பில் பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்ததையடுத்துக் குறித்த நபரைக் கைது செய்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மேலும், தாக்குதல்தாரியைக் கைது செய்யுமாறு பொலிஸாரை வலியுறுத்திக் குருநாகல் போதனா வைத்தியசாலையில் நேற்று, வைத்தியர்கள் ஒரு நாள் அடையாளப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

T01

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply