உலகின் முதலாவது சர்வதேச சுற்றுச்சூழல் பல்கலைக்கழகம் இலங்கையில்!

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான உலகளாவிய முயற்சிக்கு ஆதரவளிக்கும் வகையில் உலகின் முதலாவது சர்வதேச சுற்றுச்சூழல் பல்கலைக்கழகம் இலங்கையில் நிறுவப்படவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெற்ற 2020-2021ற்கான 10 ஆவது சுற்றாடல் முன்னோடி ஜனாதிபதியின் பதக்கம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டபோது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

காலநிலை மாற்றம் உலகிற்கு ஒரு குறிப்பிடத்தக்க சவாலாக இருந்தாலும், அதை ஆய்வு செய்வதற்கு மத்திய ஆய்வு மையம் இல்லை என்பதை ஆமோதித்த ஜனாதிபதி, இந்த முயற்சியில் இலங்கையுடன் இணைந்து கொள்ளுமாறு பல நாடுகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் காலநிலை மாற்றத்தைத் தாமதப்படுத்தியதே தவிர, அதைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவில்லை என ஜனாதிபதி விக்கிரமசிங்க வலியுறுத்தினார்.

இவ்விழாவில் ஆசிரியர்கள், பள்ளிகள், பிராந்திய சுற்றுச்சூழல் அதிகாரிகள் மற்றும் அலுவலகங்களின் சிறந்த சேவையை அங்கீகரித்து, 129 சுற்றுச்சூழல் முன்னோடிகளுக்கு ஜனாதிபதி பதக்கங்கள் வழங்கப்பட்டன.

சுற்றாடல் முன்னோடி ஜனாதிபதி பதக்கம் வென்ற 14 பேரை உருவாக்கிய அரலகங்வில விலயாய தேசிய பாடசாலை சிறந்த பாடசாலையாக விருது பெற்றது. அதேவேளை மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் மத்திய மாகாண அலுவலகம் சிறந்த அலுவலகத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது.

T01

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply