யானை தாக்கி யுவதி உயிரிழப்பு!

கொஸ்லந்த, மேல் தியலும நீர்வீழ்ச்சிக்கு அருகில் முகாமிட்டிருந்த இளம் காதலர்களை காட்டு யானை தாக்கியதில் யுவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதில் பலத்த காயம் அடைந்த இளைஞர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த 23 வயதுடைய ஜி.தரு~p என்பவரும் மாத்தறை கெகுநதுறையைச் சேர்ந்த அவரது காதலரும் மேல் தியலும நீர்வீழ்ச்சிக்கு விஜயம் செய்து அந்த இடத்தில் முகாமிட்டிருந்தபோதே குறித்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாகக் கொஸ்லந்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிராம மக்களின் உதவியுடன் பொலிஸார் யானையைக் காட்டுக்குள் விரட்டியடித்த பின்னர் சடலத்தைச் சம்பவ இடத்திலிருந்து அப்புறப்படுத்தியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பாக கொஸ்லந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

T02

 

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply