சப்ரகமுவ பல்கலைக்கழகக் கணினிப் பீடத்தின் பீடாதிபதியாகப் பேராசிரியர் ச. வசந்தப்ரியன் தெரிவு

இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழக கணினிப் பீடத்தின் முதலாவது பீடாதிபதியாகப் பேராசிரியர் ச. வசந்தப்ரியன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

2022 ஆம் ஆண்டு டிசம்பர் 27 ஆம் திகதி சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் ஒன்பதாவது பீடமாக கணினி பீடம் கல்வி அமைச்சரால் பிரகடனப்படுத்தப்பட்டது.

அதன் ஸ்தாபகப் பீடாதிபதியாப் பல்கலைக்கழகப் பேரவையினால் தரவு அறிவியல் துறையின் தலைவர் பேராசிரியர் ச.வசந்தப்ரியன் அடுத்துவரும் மூன்று ஆண்டுகளுக்குச் செயற்படும் வகையில் பீடச் சபையினால் தற்காலிகப் பீடாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் – சுன்னாகத்தை பிறப்பிடமாகக் கொண்ட பேராசிரியர் ச. வசந்தப்ரியன் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் 97ஆம் ஆண்டு உயர்தரப் பிரிவில் கல்வி கற்றவர். இவர் தனது கலாநிதிப் பட்டத்தைச் சீனாவின் வுஹான் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்திலும், முதுகலை அறிவியல் பட்டத்தை எய்ந்தோவன் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திலும் (Eindhoven University of Technology), கணினி விஞ்ஞானத்தில் இளமாணி சிறப்புப் பட்டத்தைப் பேராதனை பல்கலைக்கழகழகத்திலும் பெற்றார்.

2005 ஆம் ஆண்டு செப்ரெம்பர் முதல் இலங்கை சபரகமுவ பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றி வரும் பேராசிரியர் ச. வசந்தப்ரியன், இளம் வயதில் கணினி பேராசியராக உயர்வடைந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply