ஆசிரியர்களுக்கு இடமாற்றம்; உடனே நடைமுறைப்படுத்துக!

தற்போதைய ஆசிரியர் இடமாற்றத் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு அனைத்து பாடசாலை நிர்வாகங்களையும் கல்வி அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

இது தொடர்பான கடிதம் அனைத்துப் பாடசாலை அதிபர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு மற்றும் பத்தாண்டு இடமாற்றத்தின் கீழ் வழங்கப்பட்ட உத்தரவுகளின்படி, இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் அவர்கள் தற்போது கடமையாற்றும் இடங்களில் சேவையில் இருந்து விடுவிக்கப்படவில்லை என்றும், இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு புதிய இடங்களில் தமது கடமைகளுக்கு சமூகமளிக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும் அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்..

இது சட்ட விரோதமான செயலாகும் என்றும், பாடசாலைகளில் கடமைக்கு சமூகமளிக்கும் ஆசிரியர்களுக்கு கடமைகளை வழங்குவதற்கு உடனடியாக ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

மூன்று நாட்களுக்குள் அனைத்து அதிபர்களும் இது தொடர்பான விவரங்களைத் தம்மிடம் தெரிவிக்குமாறும் செயலாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

t03

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply