இன அழிப்பின் வாகன சுடர் பேரணி ஆரம்பம்

முள்ளிவாய்க்கால் போரின் 14 ஆம் ஆண்டு நினைவை முன்னிட்டு வடக்கு கிழக்கு பகுதிகளில் கஞ்சி வழங்கும் நிகழ்வும் இன அழிப்பின் அடையாள வாகனப் பேரணி நிகழ்வும் தமிழ் இன உணர்வாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள தமிழின உணர்வாளர்களால் வாகனப் பேரணி ஒன்று முள்ளிவாய்க்கால் கப்பலடி கடற்கரையிலிருந்து 12 ஆம் திகதியில் இருந்து தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் அழிவின் 14 ஆம் ஆண்டு நினைவுகூரப்படவுள்ளது. இந்த நிலையில், தமிழ் இன உணர்வாளர்களால் தமிழின அழிப்பை வெளிப்படுத்தும், தமிழர்களின் இன அழிப்பை அடுத்த தலைமுறைக்கு கடத்திச் செல்லும் நோக்கில் எழுச்சி வாரமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு, இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

t03

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply