யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவியைக் கடத்த முயற்சி?

யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரி வீதியில் பாடசாலை மாணவி ஒருவரை கடத்த முயற்சித்தார் என்ற சந்தேகத்தில் வெளியிடத்தைச் சேர்ந்த ஒருவர் அப்பகுதி மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு, தாக்கப்பட்டு யாழ்ப்பாணப் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்

குறிப்பாக கடந்த வாரம் மன்னார் பகுதியில் பாடசாலை மாணவர்களை வாகனங்களில் கடத்த முயற்சிக்கும் சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில் இந்தச் சம்பவம் யாழ்ப்பாணத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்று காலை யாழ்ப்பாணப் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஒஸ்மானியா கல்லூரி வீதியில் முஸ்லிம் மக்கள் அதிகம் வசிக்கும் பிரதேசத்தில், பாடசாலைக்குச் சென்ற மாணவி ஒருவரை ஒருவர் நீண்ட நேரமாக பின்தொடர்ந்து கொண்டிருந்ததை அவதானித்த அப்பகுதி மக்கள் குறித்த நபரை பிடித்து விசாரித்தபோது, அவரது பதில் சந்தேகத்துக்கிடமாக இருந்ததனால் தப்பியோட முயற்சித்த அவரை மடக்கிப் பிடித்து, தாக்கியதன் பின்னர் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: digital

Leave a Reply