மெக்சிகோவில் இளைஞன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலி!

மெக்சிகோவில் 18 வயது இளைஞன் ஒருவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில்  3 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை, மெக்சிக்கோ நேரப்படி காலை 10:57 மணியளவில் நிகழ்ந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த மெக்சிக்கோ பொலிஸார் குறித்த இளைஞனைச் சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொன்றனர்.

மெக்சிகோவின் பார்மிங்டனில் உள்ள குடியிருப்புப் பகுதிக்கு வந்த குறித்த இளைஞன், திடீரென அங்கு குழுமியிருந்த பொதுமக்களை நோக்கித் துப்பாக்கியால் சுட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் மீதும் குறித்த இளைஞன் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டதாகவும், இதில் 2 காவலர்கள் உட்பட 9 பேர் படுகாயங்களுக்கு உள்ளானதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

துப்பாக்கிச் சூடு நடத்திய இளைஞன் குறித்தும், தாக்குதலுக்கான காரணம் குறித்தும் விபரங்கள் இன்னமும் தெரியவில்லை என மெக்சிக்கோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

T01

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply