யாழில் இன்று மாணவிகளைக் கடத்த முயற்சித்ததாக கூறப்படும் நபர் குறித்து வெளியான தகவல்

யாழ்ப்பாணம் – நாவாந்துறையில் பாடசாலை மாணவிகளைக் கடத்த முயன்றார் என அப்பகுதி மக்களால் நையப்புடைக்கப்பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், குறித்த நபர் காணாமல் போனமை தொடர்பாக ஏற்கனவே குடும்பத்தினரால் வவுனியா காவல் நிலையத்தில் முறைப்பாடொன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் – நாவாந்துறையில் இன்று காலை பாடசாலை மாணவிகளைக் கடத்த முயன்றார் என அப்பகுதி மக்களால் நபர் ஒருவர் மடக்கிப் பிடிக்கப்பட்டு யாழ்ப்பாணம் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: digital

Leave a Reply