தோணி கவிழ்ந்ததில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

மட்டக்களப்பு தனியார் விடுதிக்கு அருகிலுள்ள வாவியில் மீன்பிடிக்கச் சென்ற ஒருவர் தோணி கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் திங்கட்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதாக மட்டு தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.

கல்முனை, பாண்டிருப்பு எல்லை வீதியைச் சேர்ந்த 35 வயதுடைய உதயராஜன் தனேஜன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் வெளிநாட்டில் இருந்து வந்து கல்லடி பிரதேசத்தில் திருமணம் முடித்து 3 மாதங்களான நிலையில், அடுத்தவாரம் மீண்டும் வெளிநாட்டுக்குச் செல்லவிருந்தார்.

மனைவியாரின் உறவினர்களான இருவருடன் சேர்ந்து கல்லடி வாவியில், தனியார் விடுதிக்கு முன்னால் தோணியில் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது தோணி கவிழ்ந்ததில் குறித்த நபர் நீரில் மூழ்கியதை அடுத்து, அவரை அங்கிருந்து காப்பாற்றி வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டு. போதனா வைத்தியசாலை பிரேத அறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

T03

 

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply