யாழ். மாநகர சபையின் முன்னாள் முதல்வர் ஆனோல்ட் கைது

யாழ். மாநகர சபையின் முன்னாள் முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் யாழ்ப்பாணப் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மார்ட்டின் வீதி அலுவலகத்தில் வைத்து ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இன்று வாக்குமூலம் வழங்குவதற்காக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு அவர் சென்றபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், அவர் இன்றைய தினம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

You May Also Like

About the Author: digital

Leave a Reply