ஐஸ் போதைப்பொருள் வலையமைப்பைச் சேர்ந்த 11 பேர் கைது

ஐஸ் போதைப்பொருள் விநியோக வலையமைப்பைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படும் சிறைச்சாலைச் சிறைக்காவலர் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 25 கிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கம்பஹா தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மினுவாங்கொடை பகுதியில் போதைப்பொருள் விநியோகம் செய்த ஹோட்டல் முகாமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து கிடைத்த தகவலின்படி, உக்கல்பட பகுதியில் ஐஸ் போதைப்பொருள் பெறச் சென்ற எட்டுப்பேர் கைது செய்யப்பட்டனர்.

பின்னர், ராகம பகுதியைச் சேர்ந்த நபரிடம் விசாரணை நடத்தியபோது, ​​சிறைச்சாலை அதிகாரி ஒருவர் போதைப்பொருளைக் கொடுப்பது தெரியவந்தது.

அதன்படி, திட்டமிடப்பட்ட நடவடிக்கை ஒன்றின் மூலம் அந்த சிறைச்சாலையின் இராண்டாம் வகுப்புச் சிறைக் காவலர் கம்பஹா, கிரிதிவிட்ட பகுதிக்கு வரவழைக்கப்பட்டு அவரும் கைது செய்யப்பட்டுள்ளார். அதன்போது, ​​அவர் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் கடவத்தை பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடையவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

t03

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply