சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறு பொதுச் சுகாதார ஆய்வாளர் சங்கம் அறிவிப்பு

கொவிட்-19 வைரஸ் உட்பட பல்வேறு வகையான வைரஸ்களின் பரவலைத் தடுக்கப்பதற்காக, முன்னர் அறிவிக்கப்பட்ட சுகாதாரப் பரிந்துரைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று பொதுச் சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் (PHI) இன்று அறிவித்துள்ளது.

நாட்டில் தற்போது கொவிட்- 19 பரவல் அதிகரித்து வருகின்ற நிலையிலேயே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சந்தேகத்திற்கிடமான கொவிட் இறப்புகள் நாட்டில் பதிவாகத் தொடங்கியுள்ளன என்றும் PHI சங்கம் கூறியுள்ளது.

எனவே, கொவிட்-19 வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கு, முன்னர் அறிவிக்கப்பட்ட சுகாதாரப் பரிந்துரைகளை மக்கள் பின்பற்றுவது கட்டாயமாகும் என PHI சங்கம் எச்சரித்துள்ளது.

T01

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply