போதகர்களுடன் எவ்விதத் தொடர்பும் இல்லை: மஹிந்த ராஜபக்‌ஷ

ஜெரோம் பெர்னாண்டோ மற்றும் உபேர்ட் ஏஞ்சல் ஆகிய போதகர்களை ஒருமுறைதான் சந்தித்துள்ளதாகவும் அவர்களுடன் எவ்விதத் தொடர்பும் இல்லை எனவும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

குறித்த போதகர்களுடன் தனக்கு தொடர்பு இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கும் வகையில் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜெரோம் பெர்னாண்டோவின் காரியாலயத்தினால் கோரிக்கை விடுக்கப்பட்டதன் காரணமாகவே தாம் அவர்களை ஒருமுறை சந்தித்ததாக மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

பௌத்தம் மற்றும் ஏனைய மதங்கள் தொடர்பில் ஜெரோம் பெர்னாண்டோ வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தாம் கண்டிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உத்தியோகபூர்வ சந்திப்பு என்பதால் புகைப்படங்கள் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டதாகவும், அதைத்தவிர அவர்களுடன் தனக்குத் தனிப்பட்ட உறவு இல்லை என்றும் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

T03

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply