கொழும்பில் 10 மணித்தியால நீர் வெட்டு!

கொழும்பின் பல பகுதிகளுக்கு இன்று இரவு 10 மணி முதல் நாளை இரவு 8 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

கோட்டை மற்றும் கடுவெல நகரசபைப் பகுதிகளுக்கும் மஹரகம மற்றும் பொரலஸ்கமுவ நகரசபைப் பகுதிகளுக்கும் இவ்வாறு நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.

அத்துடன், குறித்த காலப்பகுதியில் கொழும்பு 4, 5, 7 மற்றும் 8 ஆகிய இடங்களுக்கும் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.

அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் அவசர பராமரிப்புப் பணிகள் காரணமாக நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுத் தெரிவித்துள்ளது.

T03

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply