நல்லூர் கந்தன் பெருவிழா காளாஞ்சி யாழ் மாநகரசபையிடம் கையளிப்பு

நல்லூர்க் கந்தசுவாமி கோவில் வருடாந்த பெருவிழா எதிர்வரும் ஓகஸ்ட் 21 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து இருபத்தைந்து தினங்கள் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், நல்லூர்க் கந்தன் பெருவிழாவுக்கான ஆலயச் சூழல் பராமரிப்பு, ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கான அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்திசெய்தல், வீதித் தடைகள் அமைத்துச் சீரான போக்குவரத்துக்கு வழிசெய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபடும் யாழ் மாநகரசபையினருக்கு ஆலய சம்பிரதாய முறைப்படி இன்றைய தினம் (20) பெருவிழா நாட்காட்டி அடங்கிய காளாஞ்சி ஆலயத்தினரால் கையளிக்கப்பட்டது.

You May Also Like

About the Author: digital

Leave a Reply