சிறிலங்காவில் இலத்திரனியல் கடவுச்சீட்டு! – வெளியான தகவல்

இலத்திரனியல் கடவுச்சீட்டை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்தார்.

இவ்வருடத்திற்குள் இலங்கையில் இலத்திரனியல் கடவுச்சீட்டு அறிமுகப்படுத்தப்படும் எனவும் இ-பாஸ்போர்ட்களுக்கான கொள்முதல் நடவடிக்கைகளும் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்தத் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு பல நாடுகள் இலங்கைக்கு தங்கள் உதவியை வழங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply