மன்னாரில் காணாமல் போன மாணவி புத்தளத்தில் கண்டுபிடிப்பு

மன்னார் – முசலி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பண்டாரவெளி, மணற்குளம் என்ற முகவரியில் வசிக்கும் ரிகாஷா (வயது- 15) என்ற மாணவி காணாமல் போயுள்ள நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை (19) மாலை புத்தளத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்.

குறித்த மாணவி பண்டாரவெளி முஸ்லிம் வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி கற்று வருவதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

கடந்த 18 ஆம் திகதி காலை முதல் மாணவியை காணவில்லை என அவரது தந்தை காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தார்.

இந்த நிலையில், குறித்த மாணவி நேற்று வெள்ளிக்கிழமை (19) மாலை புத்தளத்தில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், புத்தளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply