தேர்தலுக்காக செலவிடப்பட்ட பணம் இதுவரை அரசாங்க அச்சகத்துக்கு வழங்கப்படவில்லை!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிற்போடப்பட்டுள்ள நிலையில் தேர்தலுக்காக வாக்குச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்களை அச்சிட செலவிடப்பட்ட தொகை இதுவரையில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அரசாங்க அச்சகத்துக்கு வழங்கப்படவில்லை என அரசாங்க அச்சக திணைக்களத்தின் தலைவர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.

குறித்த தொகை இருபது கோடிக்கும் அதிகம் எனவும், இதன் காரணமாக அரசாங்க அச்சகத்தின் செயற்பாடுகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply