வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் கடமைகளைப் பொறுப்பேற்றார்

புதிதாக நியமனம் பெற்றுள்ள வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் காலை 9.20 மணியளவில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். இந்த நிகழ்வு இன்று திங்கட்கிழமை (22) காலை யாழ்ப்பாணத்தில் உள்ள வடமாகாண ஆளுநர் நடைபெற்றது.

கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர், ஆளுநர் சர்வமதத் தலைவர்களிடம் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டார்.

இரண்டாவது தடவையாக வடக்கு மாகாண ஆளுநராக திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா மே 15 ஆம் திகதி ஐனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பதவி நீக்கம் செய்யப்பட்டிருந்தார். அதன் பின்னர், மே 17 ஆம் திகதி திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ், ஐனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

You May Also Like

About the Author: digital

Leave a Reply