வயலுக்குள் பயந்த வட்டுக்கோட்டை பஸ்

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் வயலுக்குள் பாய்ந்த இலங்கைப் போக்குவரத்துச் சபை பேருந்து ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் பொதுமக்களால் மீட்கப்பட்டது.

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் நேற்று, பயணித்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வயல்வெளிக்குள் பாய்ந்ததுள்ளது.

அதிஷ்டவசமாக அந்த இ.போ.ச. பேருந்து பயணிகள் சேவையில் ஈடுபடாத நிலையில், பேருந்தில் ஒரு சில இ.போ.ச ஊழியர்கள் மாத்திரம் பயணித்திருந்தனர்.

இந்த நிலையில் விரைந்து செயற்பட்ட பொதுமக்கள், ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் பேருந்தை மீண்டும் வீதிக்கு கொண்டுவந்தனர்.

T03

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply