பௌத்தர்கள், முஸ்லிம்கள், இந்துக்களிடம் ஜெரோம் மன்னிப்பு கேட்கிறார்

தாம் நிச்சயமாக இலங்கைக்கு திரும்புவேன் என்று கூறிய அதேவேளை, ஆயர் ஜெரோம் பெர்னாண்டோ தனது கருத்து பௌத்த, இந்து மற்றும் இஸ்லாமிய மத தம்பிக்கையாளர்களுக்கு ஏதேனும் காயத்தை ஏற்படுத்தியிருந்தால், அதற்காக நேரலை காணொளி மூலம் மன்னிப்பு கோரியிருந்தார்.

எனினும், தனது மன்னிப்பு உண்மையைப் பிரசங்கித்ததற்காக அல்ல, ஆனால் அவர்களின் உணர்வுகளைப் புண்படுத்தியதற்காக என்று அவர் கூறினார்.

நான் நற்செய்தி உண்மையைப் பிரசங்கித்தேன். நான் பைபிளில் உள்ளதைப் பிரசங்கித்தேன். அது இன்னும் பைபிளில் உள்ளது. நான் எந்த தவறும் செய்யவில்லை.

எனினும் நான் என் புத்த சகோதரர்கள், இந்து சகோதரர்கள், இஸ்லாமிய சகோதர சகோதரிகளிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். என் வார்த்தைகள் உங்களை மனரீதியாக காயப்படுத்திவிட்டன.

இலங்கையில் உள்ள பௌத்த மதகுருமார்களிடம் நான் பணிவுடன் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன், என்று அவர் கூறியுள்ளார்.

T03

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply