கிழக்கின் புதிய ஆளுநரை சந்தித்த சுமந்திரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனுக்கும் கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெறுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிழக்கு மாகாண அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட கிளை தலைவர் எஸ்.குகதாஷன் ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply