வெட்டுக்காயங்களுடன் உணவக உரிமையாளர் சடலமாக மீட்பு!

கல்கிசை 4 ஆவது ஒழுங்கையில் இருந்து 29 வயதான உணவக உரிமையாளர் ஒருவர் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபருக்கும், உணவக உரிமையாளருக்குமிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதால் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், சந்தேகநபர் தப்பி சென்றுள்ளதாகவும், அவரை கைது செய்வதற்கான நடவடிக்ககைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply