பாடசாலை மாணவர்களுக்கு மட்டக்களப்புப் பொலிஸார் விடுத்துள்ள அறிவித்தல்

மட்டக்களப்பு தலைமை நிலையப் பொலிஸார், பாடசாலை மாணவர்களுக்காக அறிவித்தல் ஒன்றை துண்டுப்பிரசுமாக வெளியிட்டுள்ளனர்.

நாட்டில் அண்மைக் காலமாக சிறுவர் கடத்தல் முயற்சிகள் அதிகரித்துள்ளதன. எனவே பாடசாலை மாணவர்களை அவதானமாக செயற்படுமாறு அந்தத் துண்டுப்பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாடசாலை முடிந்தவுடன் மாணவர்கள் அநாவசியமாக வெளியில் நிற்காமல் வீட்டுக்கு உடன் செல்ல வேண்டும், இனம் தெரியாதோர் உண்பதற்கு ஏதாவது கொடுத்தால் வாங்க வேண்டாம், இனம் தெரியாதோர் :வாகனங்களில் ஏற்றிச் சென்று வீடுகளில் விடுகின்றோம்’ என்றால் வாகனங்களில் ஏற வேண்டாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாணவர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறும் இது தொடர்பாக பெற்றோருக்கு தெரியப்படுத்துமாறும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்குமாறும் சந்தேகப்படக்கூடியது போன்று யாராவது நடமாடினால் பொலிஸாரின் அவசரத் தொலைபேசி அழைப்பிற்கு அல்லது 065 2224356, 065 2224422 என்ற இலக்கத்துக்கு அறிவிக்குமாறும் துண்டுப்பிரசுரத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

T03

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply