கயானா பாடசாலையில் தீ விபத்து; 19 குழந்தைகள் உயிரிழப்பு

மத்திய கயானாவின் சுரங்க நகரமான மஹ்தியாவில் ஏற்பட்ட தீ விபத்தில் 19 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகக் கயானா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்று நள்ளிரவு இந்த தீ விபத்தானது, பாடசாலை மாணவர்கள் தங்கியிருக்கும் விடுதியில் ஏற்பட்டது.

தீ விபத்தில் காயமடைந்த பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மோசமான வானிலை காரணமாக தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தாமதமடைவதாக அந்த நாட்டு அரசாங்கம் தெரிவிக்கின்றது.

முதற்கட்ட விசாரணைகளில், குறித்த தீப்பரவலானது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தீப்பரவலுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என கயானா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

T01

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply