முகமாலையில் பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் பலி

கிளிநொச்சி – முகமாலை பகுதியில் இன்று காலை 6.30 மணியளவில் நடைபெற்ற விபத்தில் யாழ்ப்பாணம் துன்னாலைப் பகுதியை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த அரச பேருந்துடன், கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்துச் சம்பவித்துள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்தியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், அதில் பயணித்த சிறுவர்கள் இருவர் படுகாயமடைந்த நிலையில் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

T03

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply