எம்.பி.க்களின் காப்பீட்டில் உயர்வு இல்லை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் காப்புறுதி அதிகரிக்கப்படவில்லை என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதாக பிரதிச் சபாநாயகர் அஜித் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த பிரதிச் சபாநாயகர், இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடல் நடைபெறவில்லை எனப் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் காப்புறுதியை இரண்டு அல்லது மூன்று மடங்காக அதிகரிப்பதாகவும் அதேசமயம் பாடசாலை மாணவர்களின் பருவச்சீட்டுக்கள் குறைக்கப்படுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்திருந்தார்.

இதற்குப் பதிலளித்தபோதே, நாடாளுமன்ற உறுப்பினர்களின் காப்புறுதி அதிகரிக்கப்படவில்லை எனவும், அது தொடர்பில் இதுவரையில் கலந்துரையாடல்கள் எதுவும் இடம்பெறவில்லை எனவும் பிரதிச் சபாநாயகர் குறிப்பிட்டிருந்தார்.

T03

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply