இத்தாலியில் வாகன விபத்தில் இலங்கையர் ஒருவர் பலி!

இத்தாலியின் பெர்காமோ நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் பிரதீப் பெர்னாண்டோ என்ற இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இத்தாலியின் பெர்காமோவில் உள்ள பொலிஸ் நிலையத்துக்குச் சென்று கொண்டிருந்தபோது எதிர்த் திசையில் இருந்து வந்த கொள்கலன் வாகனம் ஒன்றுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்த சஞ்சீவ பிரதீப், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

வென்னப்புவ கட்டுனேரிய பிரதேசத்தை சேர்ந்த உயிரிழந்த சஞ்சீவ பிரதீப் பெர்னாண்டோ என்ற இவர் 24 வருடங்களுக்கு முன்னர் இத்தாலியில் வேலைக்கு சென்று தனது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் அங்கு வசித்து வந்துள்ளார்.

 

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply