கொழும்பு – காங்கேசன்துறை ரயில் சேவை ஜூலையில் ஆரம்பம்

கொழும்பில் இருந்து காங்கேசன்துறை வரையிலான ரயில் சேவைகள் எதிர்வரும் ஜூலை 15 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ரயில் தண்டவாளத்தில் சில புனரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதன் காரணமாக வடக்குப் பாதையின் ரயில் சேவைகள் அனுராதபுரம் வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்தன.

அநுராதபுரத்தில் இருந்து வவுனியா வரையான புகையிரதப் பாதையின் புனரமைப்புப் பணிகளை அடுத்த மாதத்திற்குள் பூர்த்தி செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி, கொழும்பில் இருந்து காங்கேசன்துறை வரையிலான புகையிரதச் சேவைகள் எதிர்வரும் ஜுலை மாதத்திற்குள் மீள ஆரம்பிக்கப்படும் என மஹோ – ஓமந்தை புகையிரதத் திட்டத்தின் பணிப்பாளர் அசோக முனசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

T03

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply