வர்த்தக நிறுவனங்கள் மூடப்படும் அபாயம் : சஜித் பிரேமதாச

நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக பல வர்த்தக நிறுவனங்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், அரசியல்வாதிகளின் செயற்பாடுகளினால் ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இந்நிலைமையானது நாட்டு மக்களின் பொருளாதாரத்தைக் கூடப் பாதிக்கலாம் எனவும், ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்பட்டால், அங்கு பணிபுரிபவர்களின் தொழிலுக்கு என்ன நடக்கும், என நினைத்துப் பார்க்க முடியாதுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இன்றைய பாராளுமன்ற அமர்வின்போது நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் எழுப்பப்பட்ட கேள்வியொன்றிக்கு பதில் அளிக்கும்போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

T03

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply